சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தடுக்கி விழுந்ததாக `லங்கா நியூஸ்வெப்` தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அவரது கால் ஒன்றில் வலி ஏற்பட்டதால், சிறப்பு மருத்துவ நிபணர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் அவரது காலில் ஏற்பட்ட கடும் வலி தீரவில்லை. இதனால், நேற்று முன்தினம் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சிறிலங்கா அதிபர் தவிர்த்துக் கொண்டுள்ளார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து திரும்பியதில் இருந்து சிறிலங்கா அதிபர் கோபமான மனோநிலையில் இருப்பதாகவும், அமைச்சர்கள் மீது எரிந்து விழுவதாகவும் சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்சவுக்கு வரும் ஓகஸ்ட் மாதம் வரை கிரகநிலை சரியில்லை என்று அவரது மூத்த சோதிடர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் சமய நிகழ்வுகளில் பங்கேற்குமாறும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளதுடன், முக்கியமான முடிவுகள் எதையும் இந்தக் காலப்பகுதிக்குள் எடுக்க வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சிறப்புச் செய்திகள்
Labels
தடுக்கி விழுந்தார் சிறிலங்கா அதிபர்!
23.2.12Labels: இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக