
ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என, மதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தைகளில் ம.தி.மு.க. மிகுந்த கண்ணியத்தையும் அமைதியான போக்கையும் கடை பிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இத்தகைய செயல்களில் கழக தோழர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
சிறப்புச் செய்திகள்
Labels
ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்
18.3.11Labels: தமிழ்நாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக