மட்டு.கல்லடி பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள்- பார்வையிட மக்கள் வெள்ளம்

30.11.10


மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச்செல்கின்றன. இவற்றைக்காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கூடியுள்ளதை அவதானிக்கமுடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இன்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருளவிலான பாம்புகள் நீந்தி ஓடுவது இது இரண்டாவது தடவையாகும்.

இவ்வாறு கடந்த 2004 ஆம் ஆண்டும் இலட்சக்கணக்கான பாம்புகள் வாவியில் நீந்தின. இவ்வாறு பாம்புகள் தென்படட்டு 5 மாதங்களில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதும் குறிப்படத்தக்கது.

இப்பாம்புகள் வெளியானதன் பின்னர் இம்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துக்கள்: