லண்டனைச் சேர்ந்த தமிழ் சிறுவன் Olympic Magic Show விற்கு முன்மொழிவு

27.5.12


லண்டனைச் சேர்ந்த சாந்தன் எனும் 13 வயது தமிழ்ச் சிறுவன் Olympic இல் Magic Show செய்வதற்குரிய நிரலில் முன்மொழியப்பட்டுள்ளார்.இந்நிலையில், இவருக்குக் கிடைக்கும் Emails ஆதரவின் எண்ணிக்கை மூலம் Magic Show செய்வதற்கு தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும். புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் Magic வித்தை செய்யும் தமிழர்கள் மிக மிக அரிது.

குறித்த சிறுவன் தெரிவுசெய்யப்படுவாராயின் பெற்றோர், உறவினர், தமிழ் சமூகம் எனப் பலரும் பெருமைப் படக்கூடியதாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

அந்த வகையில் இந்த http://www.gosurrey.info/p-g-school-games/surrey-schools-have-talent-2/ Click பண்ணி அவருக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் Magic Show செய்வதற்கு தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
READ MORE - லண்டனைச் சேர்ந்த தமிழ் சிறுவன் Olympic Magic Show விற்கு முன்மொழிவு

வெற்றி விழாவில் வெளியே வந்த சர்ச்சைக்குரிய ஆழ ஊடுருவும் இராணுவ அணி!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் கடந்த 19ஆம் திகதி மாபெரும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் 15 படையினருக்கு இலங்கையில் படையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான “பரம வீர விபூஷண“ என்ற விருது வழங்கப்பட்டது.

போர்க்களத்தில் தமது உயிரை மதிக்காமல் தீரத்துடன் செயற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற 15 பேரில் ஒருவர் கூட உயிருடன் இல்லை.

1981ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எட்டே எட்டுப் படையினருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் சுமார் 24 ஆயிரம் படையினரை இழந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவர்களில் 8 பேருக்கு மட்டும் தான் இந்த விருது கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் வரை கிடைத்திருந்தது.

கடந்த 19ஆம் திகதி விருது பெற்றவர்களில் இருவர் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியில் இடம்பெற்று மரணத்தைத் தழுவியவர்களாவர்.

ஏனைய பெரும்பாலானோர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் ஆற்றிய பணிக்காக இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்த விருது வழங்கலின் போது, அரசாங்கம் ஆழ ஊடுருவும் அணி குறித்து வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினால் உருவாக்கப்பட்ட ஆழ ஊடுருவும் அணிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்திலும், நான்காவது கட்ட ஈழப் போரை வெற்றி கொள்வதிலும் முக்கியமான பங்கு வகித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

2002ல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னதாக, 2001 செப்டம்பர் 26ம் திகதி புதுக்குடியிருப்புக்கு அருகே ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் உயிரிழந்தார்.

விடுதலைப் புலிகளின் கடல், வான், தரைப் படைப்பிரிவுகளின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் இவர் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இவர் மீதான கிளைமோர் தாக்குதல் ஒட்டுசுட்டானில் இடம்பெற்றதாகவே புலிகளால் தகவல் வெளியிடப்பட்டது.

ஆனால் உண்மையில் அந்த தாக்குதல் நடந்த இடம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில், புதுக்குடியிருப்பு நகருக்கு மிகவும் அருகில் தான்.
அப்போது விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கியது புதுக்குடியிருப்பு.

அதற்கருகே வரை ஆழ ஊடுருவும் அணிகள் நுழைந்தன என்றால், அது புலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தி விடும் என்பதால் தான் ஒட்டுசுட்டான் என்று அவர்கள் அறிவித்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னரே புதுக்குடியிருப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் புலிகள் உருவாக்கினர்.

அதைவிட, மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நெடுங்கேணியிலும், இன்னொரு மூத்த தளபதி கேணல் ஜெயம் மன்னாரிலும் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர்.

மூன்றாவது கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிய ஆழ ஊடுருவும் அணி, நான்காவது கட்ட ஈழப்போரின் அச்சாணியாகவே மாறியது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் அகன்ற போர் அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தரப்பை ஊடறுக்க விடாமல் புலிகள் முன்னரங்கை அமைத்துச் சண்டையிட்டனர்.

அப்போது புலிகளின் பின்கள விநியோகத்தையும், முக்கிய தளபதிகளையும் இலக்கு வைத்து ஆழ ஊடுருவும் அணிகள் கிளைமோர் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக பெரும் நெருக்கடி கொடுத்தது.

இத்தகைய தாக்குதல்கள் நடந்த பின்னர், அந்த இடத்தைச் சுற்றிலும் காடுகளில் தேடுவதற்கும் புலிகள் தமது ஆளணி வளத்தைச் செலவிட வேண்டியிருந்தது. இது முன்னரங்கில் இருந்த புலிகளின் கவனத்தை, அவ்வப்போது பின்களப் பகுதி நோக்கித் திரும்ப வைத்தது.

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வரும் வரையில், இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் செயற்பட்டன.
போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அணியினர் மக்களோடு மக்களாக கலந்து விட்டிருந்ததாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின.

புலிகளால் எதுவும் செய்ய முடியாத கட்டம் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்ற கருத்து வலுவாக உள்ளது. புலிகளின் மரபுவழிப் போர்ப் பலத்தை ஒன்று குவிய விடாமல் திசை திருப்பி, காடுகளில் அவர்களை அலைய விட்டு, போராற்றலை பலவீனப்படுத்த ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் இராணுவத்துக்குக் கைகொடுத்தன.

புலிகளின் பல தளபதிகள் இந்த அணியினரின் கிளைமோர் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணமாகினர். வடபோர்முனைத் தளபதிகளில் ஒருவராக இருந்த லெப்.கேணல் மகேந்தி, இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் போன்றவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள்.

ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் ஒரு கட்டத்தில் புலிகளின் தளபதிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி முடக்கி வைக்கின்ற அளவுக்கு நெருக்கடியினைக் கொடுத்தது. போர்நிறுத்த காலத்திலும் கூட இந்த அணியின் செயற்பாடுகள் வன்னிப் பகுதிக்குள் குறையவில்லை.

அப்போதும் சரி, போர் நடந்து கொண்டிருந்த போதும் சரி, இத்தகையதொரு அணி தம்மிடம் இல்லை என்றும் புலிகளின் பிரதேசத்துக்குள் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் படைத்தரப்பு கூறிவந்தது.

போர் வெற்றி விழாவில் அதிஉயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மேஜர் லலித் ஜெயசிங்கவும் ஒருவர். 2008ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று அப்போது புலிகள் வசம் இருந்த ஒட்டுசுட்டான் பகுதியில் நடந்த மோதலில், 3வது சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த இவர் கொல்லப்பட்டார்.

ஆழ ஊடுருவும் அணிகளுக்குப் பொறுப்பாக இருந்த இவர், மாவீரர் நாளன்று புலிகளின் முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு வாரம் முன்னதாகவே வன்னிக்குள் ஊடுருவியவர்.

முன்னரங்கில் இருந்து 40 கி.மீ உள்ளே ஊடுருவிய இவரது அணி, தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் தேடுதல் நடத்திய புலிகளின் சுற்றிவளைப்பில் சிக்கியது.

இந்த மோதலின் போது லெப்.கேணல் லலித் ஜெயசிங்க மரணமானார். இவர் மரணமானபோது அவர் பற்றிய விரிவான தகவல்களை இராணுவத் தலைமையகம், இணையத்தளத்தில் வெளியிட்ட மறுநாளே அதை நீக்கியது.
ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளை மறைப்பதற்கே அந்த விபரங்கள் நீக்கப்பட்டன.

விருதுபெற்ற இன்னொருவர் 3வது சிறப்புப் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் சந்தன. இவர் மாங்குளம் கிளிநொச்சி வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்லும் போது, மாங்குளம் துணுக்காய் வீதியைக் கடக்க முயன்றபோது புலிகளிடம் மாட்டிக் கொண்டவர். அந்த மோதலில் அவர் மரணமானார்.

நான்காவது கட்ட ஈழப்போர் காலத்திலும், போர் நிறுத்த காலத்திலும் வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்கள் தனியே விடுதலைப் புலிகளுக்கு மட்டும் இழப்புகளை ஏற்படுத்தவில்லை.

மாங்குளம் அருகே நடந்த ஒரு கிளைமோர் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்லப்பட்டார். இன்னொரு தாக்குதலில் கிளி பாதர் என்று அழைக்கப்படும், வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளரான கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டிருந்தார்.

அதேபோல பொதுமக்கள் பயணம் செய்த வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதற்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளே பொறுப்பு என்று விடுதலைப் புலிகள் கூறினர். அரசாங்கமோ அதை மறுத்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னரணில் இருந்து 30, 40 கி.மீ தொலைவுக்குப் படையினர் எவ்வாறு செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியது.

விடுதலைப் புலிகளுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள்தான் அங்கு நடக்கும் கிளைமோர் தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் படைத்தரப்பு கூறியது.
இதனால் தான் மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்ட போது அவர் பற்றிய தகவல் குறிப்புகள் இராணுவ இணையத்தளத்தில் இருந்து அவசரமாக நீக்கப்பட்டன.

இப்போது போர் முடிந்து விட்டது. ஆழ ஊடுருவும் அணிகள் மறைந்து ஒளிந்து ஊடுருவ வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் முகத்தை மறைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களில் புலிகள் அல்லாதவர்களும் பாதிக்கப்பட்டனர். அவ்வாறான சம்பவங்களுக்கு ஆழ ஊடுருவும் அணி பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

இப்போதைய சூழலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்ட விவகாரம் போர்க்குற்றமாகவே பார்க்கப்பட்டு விடும். ஆனாலும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படும் நிலையில், ஆழ ஊடுருவும் அணியை அரசாங்கம் பகிரங்கப்படுத்தியது துணிச்சலான விடயம்தான்.

சுபத்ரா
READ MORE - வெற்றி விழாவில் வெளியே வந்த சர்ச்சைக்குரிய ஆழ ஊடுருவும் இராணுவ அணி!

யாழில் இரு பொண்கள் காணாமல் போயுள்ளார்கள்!


யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.

யாழ். ஆரியாலை ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் ஜெயசுகந்தினி மற்றும் யாழ். கொட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய தம்பிரத்தினம் சுவர்ணநந்தின ஆகிய இரு யுவதிகளே காணமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்ட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் அண்மையநாட்களில் இடம்பெற்றுவரும் காதலினால் இவ்வாறன யுவதிகள்காதலர்களுடன் தென்பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவருவது வழமை மற்றும் தென்னிலங்கையினை சேர்ந்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்து யுவதிகளை காதலித்து தங்கள் இடங்களுக்கு கூட்டிசெல்வதுமான நிகழ்வுகள்அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
இன்னிலையில் குறித்த இரு யுவதிகளும் நேற்று தொடக்கம் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. காணமற்போன யுவதிகளில் ஒருவரான நாகேந்திரன் ஜெயசுகந்தினி பத்து பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE - யாழில் இரு பொண்கள் காணாமல் போயுள்ளார்கள்!

கோவணம் கட்டிய விவசாயி ஜனாதிபதி தேர்தலில்

26.5.12

தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கொளாநல்லி குட்டப்பாளையத்தில் தங்கவேல்(வயது 53) என்ற விவசாயி வசிக்கின்றார். இவர் இதுவரை 3 முறை மொடக்குறிச்சி சட்டசபை தேர்தலிலும் மற்றும் ஈரோடு-சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு உள்ளார். இந்த தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கோவணம் கட்டியபடி மாட்டு வண்டியில் வந்த காரணத்தினால் “கோவணம் தங்கவேல்” என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவதாக கோவணம் தங்க வேல் கூறியுள்ளார். இதுபற்றி கோவணம் தங்கவேல் கூறியதாவது: 2001ம் ஆண்டு நடந்த மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டேன். பிறகு 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த மொடக்குறிச்சி தேர்தலிலும் இதுபோல சென்று மனு தாக்கல் செய்தேன்.
மேலும் 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தொகுதிகளில் ஈரோடு-சேலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். விரைவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்து உள்ளேன். இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கும் முதல் நாளே நான் வேட்பு மனு தாக்கல் செய்வேன். உயர்ந்த எண்ணம் கொண்ட குடிமகன்: இந்திய நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும், இந்திய விவசாயி இந்தியாவில் உயர் பதவியில் அமரவேண்டும். பள்ளி-கல்லூரிகளில் விவசாயம் கட்டாய பாடமாக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு நீர் வளமும், நில வளமும் தூய்மை குன்றாமல் கிடைக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டுள்ளார் கோவணம் தங்கவேல். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
READ MORE - கோவணம் கட்டிய விவசாயி ஜனாதிபதி தேர்தலில்

சீன உதவியுடன் சிறிலங்காவின் முதலாவது செயற்கைக்கோள்

சிறிலங்கா தனது முலாவது செயற்கைக்கோளினை 2015ம் ஆண்டளவில் விண்வெளி நோக்கி அனுப்புவதற்கு சீனா உதவவுள்ளது. இத்திட்டத்துக்காக சிறிலங்கா முதலீட்டு சபையுடன் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாக SupremeSAT நிறுவனம் தெரிவித்துள்ளது. இச் செயற்கைக்கோளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் அதனை விண்வெளிக்கு செலுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்காக SupremeSAT நிறுவனமானது சீன அரசுக்குச் சொந்தமான China Great Wall Industry Corporation - CGWIC நிறுவனத்துடன் உடன்பாடொன்றை எட்டியுள்ளது. 2015ல் சிறிலங்காவானது விண்வெளிச் சுற்றுப் பாதையில் தனது முதலாவது தொலைத் தொடர்பு செயற்கைக்கோளினை உலாவரவிடும் என SupremeSAT நம்புகின்றது. "நாங்கள் ஏற்கனவே சீன நிறுவனத்துடன் இணைந்து இரு செயற்கைக்கோள்களை விண்வெளிச் சுற்றுப் பாதையில் அனுப்பி வைத்துள்ளோம். இந்நிலையில் 2015ல் சிறிலங்காவினுடைய முதலாவது செயற்கைக்கோளை விண் நோக்கி அனுப்புவோம் என நம்புகின்றோம்" என SupremeSAT நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள்களை வழங்குதல், அவற்றை விண் நோக்கி அனுப்புதல் மற்றும் அனைத்துலக விண்வெளி சார் ஒத்துழைப்பை வழங்குதல் போன்றவற்றுக்காக சீன அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரேயொரு வர்த்தக நிறுவனமாக CGWIC காணப்படுகின்றது. வலைப்பின்னல் சேவைகள், பல்வேறு ஒலிபரப்பு முறைமைகள், அலைவரிசை சேவைகள், இணைய வழி அரசாங்க மற்றும் கற்றல் சேவைகள் போன்றன உள்ளடங்கலாக பல்வேறு தொடர்பாடல் சேவைகளை SupremeSAT வழங்க முடியும். இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அங்கீகாரத்துக்காக தமது நிறுவனம் தொலைத் தொடர்பாடல் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதாகவும் SupremeSAT நிறுவனத்தின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். செய்தி வழிமூலம்: Hindustan Times
READ MORE - சீன உதவியுடன் சிறிலங்காவின் முதலாவது செயற்கைக்கோள்

ராசபக்சேவை விரட்டியடிக்க ஜரோப்பாவில் தயாராகும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள்


லண்டனிற்கு எதிர்வரும் 3ம் திகதி வரவிருக்கும் கொலைவெறியன் மகிந்த ராசபக்சேவை விரட்டியடிக்க புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றார்கள். இதுவரை நீங்கள் தயாராகவல்லை என்றால் உடனடியாக உங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுங்கள்.

புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டார்கள். முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றெல்லாம் கதையளக்கும் சிங்கள அரசு பல்லாயிரம் கோடிகளை கொட்டி ஆயுதங்களை வாங்கிக் குவித்துவருகின்றது. தனது முப்படைகளையும் சிங்களம் அத தீவிரமாக பலப்படுத்தி வருகின்றது.

ஆம், இன்னும் போர் ஓயவில்லை….! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனை கொன்றுவிட்டோம் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கூக்குரல் இட்ட சிங்கள அரசு தனது இராணுவ வலிமையினை முன்னரைபார்க்க பன்மடங்கு உயர்த்துவதன் காரணம் உண்மையான போரை இனிமேல்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையினை இராசபக்சே கும்பல் உணர்ந்துள்ளதால்.

களத்தில் போர் நிச்சயம் உண்டு. ஆனால் புலத்தில் போர்களத்தை ராசபக்சே திறந்துள்ளான். கடந்தமுறை ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்து வாங்கிக்கட்டிக் கொண்டு ஓடிய மகிந்த மச்சான் மீண்டும் வரும் 3ம்திகதி லண்டன் வருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களது வீராவேசத்தை பரீட்சிப்பதற்கான களத்தை உருவாக்கியுள்ளான்.

இனத்தை அழித்தவனிற்கே அழிக்கப்பட்ட இனத்தின் அக்கினிக்குஞ்சுகளை எதிர்கொள்ள துணிவிருக்கின்றது என்றால் மொத்தமா இலட்சம் உறவுகளைப் பறிகொடுத்த நாம் ஒதுங்கியிருக்கலாமா…!?

ராசபக்சேவின் லண்டன் வருகைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியவண்ணமிருக்க வருகின்றான் என்ற செய்தி புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களது காதுவழியே சென்று மூளையை சென்றடைந்த அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் உடலில் பெரும் சிலிர்பினை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே தாம் வேலை செய்யும் நிறுவனங்களில் விடுப்பிற்கான கடிதங்களை பலர் கொடுத்துள்ளதாகவும் அன்றைய காலகட்டத்தில் ஏற்கனவே முடிவான அதிமுக்கிய வேலைகளைக் கூட தள்ளிவைத்துவிட்டு அந்த நாட்களில் லண்டன் செல்வதற்கு எமது உறவுகள் தயாராகிவரும் செய்தி எமது காதுகளை குளிர்விப்பது மட்டுமல்லாது பெருத்த நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது மகளிற்கு சத்திர சிகிச்சைக்கு அந்த நேரத்தில் முன்னனுமதி பெற்றிருந்த தந்தை ஒருவர் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஒருவாரம் சத்திரசிகிச்சைக்கான காலத்தை பிற்போட்டு குடும்த்துடன் லண்டனில் ராசபக்சேவை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளார் என்ற செய்தி உண்மையில் போர் இன்னும் ஓயவில்லை என்பதையும் வாய்ப்புகள் வசமாகும் போது தமிழர்கள் எல்லோரும் புலிகளாய் எழுவார்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

குடும் நிகழ்வு ஒன்றிற்காக விடுப்பு எடுக்க இருந்த இன்னொருவர் அதற்கு விடுப்பு எடுத்தால் லண்டன் செல்ல முடியாது என்பதால் அதனை கைவிட்டு தனது விடுப்புக் காலத்தை ராசபக்சேவிற்கான போர்க் காலத்திற்காக சேமித்து லண்டன் செல்வதற்கு ஆய்தமாகியுள்ளார்.

இது போன்று எத்தனையோ உறவுகள் லண்டன் வரும் ராசபக்சேவுக்கு நேருக்கு நேர்நின்று தமிழர்களின் நெஞ்சத்தில் கனன்று கொண்டிருக்கும் விடுதலை நெருப்பின் வீரியத்தை காட்டுவதற்கு தயாராகிக் கொண்டுள்ளார்கள்.

லண்டனில் உள்ள உறவுகள் பெரும் தயார்படுத்தலில் ஈடுபட்டிருக்க ஐரோப்பியவாழ் ஈழத்தமிழர்கள் லண்டன் போர்களம் நோக்கி புறப்படத் தயாராகிக் கொண்டுள்ளார்கள். இதுவரை லண்டன் செல்லும் எண்ணமில்லாது இருந்தவர்கள் ஏற்பாடுகள் செய்யாது இருந்தவர்கள் இனி என்ன ஆகப்போகின்றது என்ற விரக்தி நிலையில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் வாய்ப்புள்ள அனைவரும் உடனடியாக லண்டன் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை இப்போதே தொடங்குங்கள்.

ஒரு நாட்டின் அதிபரை சிறுபான்மை இனத்தவர்கள் அதுவும் அன்னிய மண்ணில் இருந்து விரட்டி அடித்தார்கள் என்ற செய்தி உலகை எம்பக்கம் திருப்பும். கடந்தமுறை விரட்டி விரட்டி பின்னங்கால் பிடரியில் பட கொலைவெறியனை விரட்டியபோதே இராசதந்திர வட்டாரத்தில் பெரும் பரபரப்புடன் நோக்கப்பட்டிருந்தது.

தற்போது உலகம் தமிழர்களின் குரலாக ஜெனீவாவில் கொலைகாரன் ராசபக்சேவின் சட்டையினை பிடித்து கேள்விகேட்க முற்பட்டுள்ள புறச்சூழலில் மகிந்த ராசபக்சேவினை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் விரட்டி அடித்துவிட்டார்கள் என்றால் அது மிகப்பெரும் வரலாறாகும்.

“போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு ஏற்ப தற்போது எமது களம் லண்டன். தமிழினத்தின் எதிரியை பழிதீர்க்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.

இந்த சந்தர்பத்தினை தவறவிடாது ஒன்று பத்தாக அல்லாது ஆயிரம் பல்லாயிரமாக திரண்டு விரட்டியடிப்போம் லண்டனிற்கு வாருங்கள். என விடுதலைக் குரலெழுப்பி அழைக்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
READ MORE - ராசபக்சேவை விரட்டியடிக்க ஜரோப்பாவில் தயாராகும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள்

யாழ் வடமராட்சி கிழக்கில் படைமுகாமினை விஸ்தரிக்கும் சிறீலங்கா கடற்படை.


வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணிப் பகுதிக் கடற்கரையோடு இருந்த சிறிய கடற்படை முகாமினை பெருந் தொகையான நிலப்பரப்பினை உள்ளடிக்கி விஸ்தரிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


போர் காலத்தில் பெரும் பங்கு வழங்கிய முகாமாகக் கூறப்படும் இம் முகாம் விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டறிவதற்கான றேடர் முகாமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
சுனாமித் தாக்கத்திற்குப் பின்னர் கடற்கரையில் இருந்து 300 மீற்றர் தூரத்திற்கு அப்பாலேயே
மக்களுடைய குடிமனைகள் அமைக்கமுடியும் என்னும் நடைமுறை கொண்டுவந்ததன் பின்னர் பெரும் பகுதியான நிலப்பரப்பினை கடற்கரையோடு விட்டுவிட்டு அப் பகுதி மக்கள் தொலைவான இடத்திற்குச் சென்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறிலங்கா கடற்படையினர் சிறிய அளவிலாக இருந்த கடற்படை முகாமினை பெருந்தொகையான நிலப்பரப்பினை உள்ளடக்கி பாரிய அளவில் விஸ்தரிப்புச் செய்யும் நடவடிக்கையில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி விஸ்தரிப்புச் செய்யப்படும் கடற்கரைப் பகுதிகளில் அப் பகுதி மீனவர்கள் கடற்றொழிலில்
ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரில் குறிப்பாக சிறீலங்கா கடற்படையினர் தங்கள் நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE - யாழ் வடமராட்சி கிழக்கில் படைமுகாமினை விஸ்தரிக்கும் சிறீலங்கா கடற்படை.

நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்

25.5.12

தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். கமலுடன் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் நடித்தார். ரஜினியுடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மை படங்களில் திலீப் இருந்தார். சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூருக்கு குடிபெயர்ந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக கோளாறும் இருந்தது. உடனடியாக அவரை மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தார்கள். 24.05.2012 அன்று உடல்நிலை மோசமானது. திடீர் மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற தீவிரமாக போராடியும் பலனின்றி இன்று (25.05.2012) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கிறது.
READ MORE - நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்

அப்பா எப்போது வருவார். மகனின் கவலையை நினைத்து கண்ணீர் விட்ட தாய்!


அப்பா எப்போது வருவார்? நான் அப்பாவை பார்க்கமுடியாதா?'' என கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த தாயிடம் கவலையுடன் கேட்டான் நான்கு வயது மகன். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நேற்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இடம்பெற்றது.இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு இளம் தாய் ஒருவர் தனது நான்கு வயது மகனுடன் வருகை தந்திருந்தார். காணாமற் போன தனது கணவரை விடுவிக்குமாறு அந்தத் தாய் கண்ணீர் மல்கியவாறு கோரிக்கை விடுத்தார். கணவரின் படத்தையும் அவர் கையில் தாங்கியிருந்தார்.

இலங்கையின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் அரசு விரைவில் உரிய பதிலளிக்கக் கோரியும் நேற்று வவுனியாவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

எமது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்?, பல வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை மனமிரங்கி விடுவியுங்கள்." என்று சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள், இளந்தாய்மார்கள் அனைவரும் உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தனர்.

காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களையும், சுலோகங்களையும் இவர்கள் தாங்கிநின்றனர். இந்தப் போராட்டத்திலாவது தமக்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்க வேண்டும் என அவர்கள் அங்கு வலியுறுத்திக் கோரினார்கள்.
READ MORE - அப்பா எப்போது வருவார். மகனின் கவலையை நினைத்து கண்ணீர் விட்ட தாய்!

மீண்டும் வருகின்றான் ராஜபக்சே- பகைவிரட்ட வா தமிழா!


அடிமைப்பட மறுத்து அகதியென்ற இழிச்சொல்லுடனும் மறுக்கப்பட்டஉரிமைக்காய் பயங்கரவாதி என்ற பழிச்சொல்லுடனும் இன்று உலகம் முழுதும் விடியலுக்காய் காத்திருக்கும் என் தமிழ் சொந்தங்களே!!

உலகம் உருண்டை என்பதை ஊர் ஊராய் அலைந்து நிரூபித்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் "சொந்தமண்' 'வீடு' 'வாசல்' எல்லாம் அங்கே விருந்தாளிகள் ஆக்கிரமிப்புக்குள் அலறித்துடித்துக்கொண்டிருக்கின்றது.விடுதலை கேட்ட ஓரே காரணத்தால் விரட்டியடிக்கப்பட்டோம்.சுதந்திரம் கேட்டபோது சுட்டுத்தள்ளப்பட்டோம்.உரிமைகள் கேட்டபோது உருட்டுக்கட்டைகளால் தாக்கப்பட்டு இருட்டு அறைகளில் அடைக்கப்பட்டோம்.இலங்கைத்தீவினில் இனியும் வாழமுடியாது என அகதியாகி காற்றிலும் நீரிலும் உயிரைக்கூட பணயம் வைத்து பயணித்து இன்று அகதிகளாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் நாங்கள் யாருக்கும் அடிமைகளாக எங்கும் வாழவில்லை வாழப்போவதும் இல்லை.

வந்தாரை வாழவைப்பதுவே தமிழன் பண்பாடாக இருந்தாலும் சொன்ற இடத்தையும் செழிப்படையவைத்து தமிழ் இனத்தின் தனித்துவத்தை பறைசாற்றி நிற்கின்றோம்.இலங்கைத்தீவிலே இன்று நேற்றல்ல அன்றுமுதல் தமிழர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.பல வருடங்களாக நாங்கள் சிங்கள பேரினவாதிகளால் பயங்கரவாதிகளாக உலகிற்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள்.ஆனால் இன்று உகலம் எங்களது போராட்டம் நியாயமானது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு எத்தணித்து வருகின்றது.மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றமில்லாத ஒன்று அந்த மாற்றத்தை செய்யவேண்டியது தமிழர்களாகிய எங்களது கடமை.

இன்று கனத்த இதயத்துடன் உலகிலே அலைந்தவண்ணம் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இருக்கின்றோம் ஆனால் மானிடமே மௌனித்துப்போக மாபெரும் இன அழிப்பை செய்து மிருகங்கள் கூட செய்யத்துணியாத கொலைகளை செய்து மனிதத்தையே கொன்று புதைத்து கொக்கரிக்கும் சிங்களவன் இன்று உகலம் முழுவதும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது தம்மை மாவீரர்களாகவும் அகிம்சாவாதிகளாகவும் அடையாளப்படுத்தி அதே நேரத்தில் தமிழர்களாகிய எம்மீது பயங்கரவாதம் என்ற முத்திரையினை பதித்து வருகின்றது .உண்மையிலே வேதனையான விடயம் குற்றமற்ற தமிழர்கள் தண்டனைகள் அனுபவித்து வரும் நிலையிலே!! குற்றவாளிகள் சுற்றவாளிகள் போல் நடமாடுவது உலகத்தில் மனிதம் மரணித்துப்போனதாகவே ஊகித்துக்கொள்ள முடிகின்றது.

எதிர்வரும் பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. இதனை தடுத்து நிறுத்தி விழாவுக்கு சிங்கள தேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதற்கு எதிர்ப்பினை தெரிவிப்பது மட்டுமல்லாது பிரித்தானிய மக்களையும் இணைத்து ஒரு போர்க்குற்றவாளி பிரித்தானிய மண்ணுக்குள் பிரவேசிப்பதை தடுப்போம் லட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்று குவித்து தமிழர்பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும். அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும்.
மனித உரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும் ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவிற்குள் இனி எந்த சந்தர்ப்பத்திலும் வரமுடியாத அளவுக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம்.

வேடந்தாங்கள் பறவைகளாய் வாழ்கின்ற போதும் அக்கினிப்பறவைகளாய் சிறகுகளை விரிப்போம் -பத்து இலட்சம் தமிழனை அகதிகளாக்கி பிருத்தானியாவிற்குள் விரட்டிய சிங்களம் எப்படி துனிச்சலாக பிரித்தாணியா வருவதற்கு ஆயத்தமாகும் ஈழத்தமிழனை இழிவாக நினைத்தானா தரங்கெட்ட தமிழன் எண்று தவறாக நினைத்தானா வரவிட்டு அடிப்பது வீரத்தமிழனின் போரியல் மரபு .கொலைவெறியர்கூட்டம் பிரித்தானியாவில் காலடி வைக்கும்போது மறத்தமிழா சுற்றிவளைத்து முற்றுகையிட்டு பின்னங்கால் புடரியில் அடிக்க ஓடவைப்போம்.

அடம்பன் கொடிகளாய் ஆங்காங்கே அலைகின்ற தமிழனெல்லாம் ஒன்றாய் திரண்டு பகைவனுக்கு எம் பலத்தினை காட்டுவோம்.இலங்கைத்தீவுக்குள்ளே சிங்களபௌத்த பேரினவாதம் சிறைப்பட்டுக்கிடக்கட்டும் .வீறுகொண்டெழு தமிழா வேட்டை நாய்களை துரத்திவிட.
READ MORE - மீண்டும் வருகின்றான் ராஜபக்சே- பகைவிரட்ட வா தமிழா!