யாழ்ப்பாணம் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

29.1.12


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தின போது, சாவகச்சேரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள விடுதிக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளார்.

அதன்பின்னர் அவர் குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர நாளை முன்னிட்டு அடுத்த மாதம் 6ம் நாள் யாழப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் அன்று அரசியல்தீர்வுத் திட்டம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றை அங்கு நிகழ்த்தக் கூடும் என்றும் சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
READ MORE - யாழ்ப்பாணம் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

முத்துக்குமாருக்கு…….

ன்று ஒரு வியாழக்கிழமை… எழும்பூரில் அலுவலகத்தில் அன்றைய பத்திரிகைப் பணிகளை ஆரம்பித்துக் கொண்டிருந்த நேரம், பரபரப்பாக ஓடி வந்தார் புகைப்படக்காரர்.
‘சார், சாஸ்திரி பவன்ல ஒருத்தன் அப்படியே கொளுத்திக்கிட்டு எரியறான்.. ஒரே பரபரப்பா இருக்கு நான் படம் எடுத்திருக்கேன்,” என்றார் பதட்டத்துடன்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் சாஸ்திரி பவனில், ஒரு மரண ஓலத்துக்கு சாட்சியாக நின்றுகொண்டிருந்தோம். இது சாத்தியமா… என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு மனிதன் தன் உடலில் நெருப்பு வைத்துக் கொளுத்திக் கொள்வானா…?
இது கோழைத்தனமல்லவா… இதை எப்படி ஆதரிக்க முடியும்? என்றெல்லாம் அடுக்கடுக்காக எழுந்த கேள்விகள், அடுத்த நொடியில் மறைந்துபோயின. முத்துக்குமாரின் மரண ஓலமே… ‘ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்… போரை நிறுத்துங்கள். ராஜபக்சே ஒழிக, பிரபாகரனுக்கு ஆதரவு கொடுங்கள்’ என்பதுதான்.
நாற்காலி மனிதர்களில் சிலரைத் தவிர, மற்றெல்லாரும் உணர்வுப்பூர்வமாக ஈழத்து சொந்தங்களுக்காக போராடிக் கொண்டிருந்த நேரம் அது. எத்தனையோ போராட்டங்கள்… ஒரு பக்கம் ஈழத்தில் ஆயிரமாயிரமாய் தமிழர்கள் செத்து விழுந்து கொண்டிருக்க, போரை நிறுத்தக் கோரி அனைவரது குரலும் ஓங்கி ஒலித்தது. நாளும் ஒரு போராட்டம். அன்றைய முதல்வர் கருணாநிதியே கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிக்காக கை கோர்த்தார். சொல்லப் போனால், போராட்டத்தை உச்சத்துக்குக் கொண்டு போனவர் அவர்தான். அந்த நேரத்தில் ‘போர் என்றால் சாகத்தானே செய்வார்கள்’ என்று தத்துவம் பேசியவர்கள் ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி, சோ மட்டும்தான். போரை நிறுத்துங்கள் என்று ஒப்புக்காகக் கூட அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா சொல்லவில்லை.
எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தனர் உணர்வாளர்கள். ஆனால் சோனியா காந்தியின் இரக்கமற்ற மத்திய அரசு, கல்லாய் சமைந்து நின்றது. எதையும் கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசின் மனசறிந்த கருணாநிதி, மெல்ல மெல்ல தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டார். அப்படியே மத்திய அரசின் தமிழகப் பிரதிநிதியாக மாறி, ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்போதுதான்… ‘அடடா… தமிழினத்தின் தலைவன் என நம்பினோமே… கூடவே இருந்து கழுத்தறுத்துவிட்டாரே… இதற்கு நேரடியாக விமர்சனம் பண்ணும் ஜெயலலிதாவே மேலாகத் தெரிகிறாரே…’ என தமிழுணர்வாளர்கள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்திருந்தனர்.
என்ன செய்தால், இந்த போராட்டத்தை இன்னும் உணர்வுப்பூர்வமாக மாற்றமுடியும், கல்லாய் நிற்கும் மத்திய அரசையும் அதன் கைப்பிள்ளையாய் மாறிப்போன தமிழக அரசையும் கரைய வைக்க முடியும் என எல்லோரும் திகைத்து நின்ற நேரத்தில்தான், முத்துக்குமார் தன் உடலையே எரித்துக் கொண்டான்.

மரண வாக்குமூலம் அளித்தபோது, அத்தனை உடல் வேதனையிலும் அவன் ஓயாமல் உச்சரித்தது ‘ஈழத்து சகோதரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களைக் காப்பாற்றுங்கள்… தலைவர் பிரபாகரனை ஆதரியுங்கள்’ என்பதுதான்.
அன்று பிற்பகல் முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தை கீழ்ப்பாக்கம் மருத்துவ பிணவறையின் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி வைகோ படிக்கப் படிக்க, கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரின் கண்களும் குளமாகியிருந்தன. எத்தனை பெரிய நெருப்பை அந்த 29 வயதில் சுமந்துகொண்டிருந்திருக்கிறான்!
தமிழகத்தில் நடப்பது தமிழினப் பற்றுள்ள ஒரு தலைவன் ஆட்சி என்ற நம்பிக்கை சுத்தமாக அற்றுப் போனது அப்போதுதான்.
அன்று முழுக்க எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை… உணவைப் பார்த்தாலே தீயில் வெந்து திட்டுத் திட்டாய் வெளிறிப் போயிருந்த முத்துக்குமார் முகம்தான் தெரிந்தது. மாலையில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு உலகுக்கு சொன்ன செய்தியை ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெரிய கட்டுரையாக்கி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். இந்தியாவின் மிக அதிகம் விற்கும் பத்திரிகை. அடுத்த இரு தினங்களில் நாடு முழுவதும் ஒரு உண்மை சேரும் என்ற நம்பிக்கை!
ஆனால், இரவு எடிட்டர் பேசினார், வியன்னாவிலிருந்து. “இந்த கட்டுரையால் என்ன நடந்துவிடும் என எதிர்ப்பார்க்கிறாய்… நாம் இதையெல்லாம் ஆதரிக்க முடியாது. கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என முதல் கட்ட கணிப்புகள் வந்துள்ளன. அதை பெரிய கட்டுரையாக உடனே எழுதி அனுப்பு…”
வாய் வரை வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டு போனை வைத்தேன்… ‘அட போய்யா..!’
-விதுரன்
(இன்று ஜனவரி 29 முத்துக்குமாரின் மூன்றாவது நினைவு தினம்)
READ MORE - முத்துக்குமாருக்கு…….

திருமலைக் கிராமம் ஒன்றில் சிங்கள் காடையர்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்! பலர் படுகாயம்!


திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களி கிராமத்தில் சிங்களக் காடையர்கள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெருமளவானோர் காயம் அடைந்திருக்கின்றனர்.

குறித்த கிராமத்தினுள் புகுந்த சிங்கள் காடையர் குழு தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பத்தினால் அந்தக் கிராமமே அல்லோல கல்லோலப்பட்டதாக அங்கிருந்து வெளியாகியிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் முதற்கட்டமாக நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைகக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பாதிக்கப்பட்டோர் தொகை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என்றும் இது குறித்த மேலதிக தகவல்களை நாளையே முழுமையாகத் திரட்ட முடியும் என்றும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ MORE - திருமலைக் கிராமம் ஒன்றில் சிங்கள் காடையர்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்! பலர் படுகாயம்!

மாவீரன் முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்


வீரத்தமிழன்,மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவை சுமந்து தேனிசை செல்லப்பா அவர்களால் பாடப்பட்ட பாடலை இங்கு இணைத்துள்ளோம்.

READ MORE - மாவீரன் முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்

முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும் திருமணம்! -


சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவவை சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற சிறிலங்கா படைச்சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறிலங்கா அதிபர் செயலகம் கூறியுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவவில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

READ MORE - முன்னாள் பெண் போராளிக்கும் சிறிலங்காப் படைச்சிப்பாய்க்கும் திருமணம்! -

ஜனவரி 29, 2012: மாவீரன் முத்துகுமார் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்

28.1.12

முத்துக்குமாரின் மரண சாணம்  
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், 
கொளத்தூர், சென்னை-99
READ MORE - ஜனவரி 29, 2012: மாவீரன் முத்துகுமார் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்

வீதியின் பெயர் மாற்றம் தமிழருக்கு செய்த துரோகம்

ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை ""நெலும் பொக்குன'' வீதி என்று பெயர் மாற்றியமை தமிழர்களுக்கு செய்த அகௌரவமான செயலாகும். தமிழர்களின் மரபுரிமைகள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன என்று மேல் மாகாண சபை உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டிற்கு பெரும் சேவைகள் செய்த தலைவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பெயர்களை வீதிகளுக்கு சூட்டினார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் படு மோசமான முறையில் சிதைத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக ஐ.தே.க. வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகையில்,

நாட்டிற்கு சேவையாற்றிய தலைவர்களை கலைஞர்களை கௌரவிக்கும் கலாசாரம் ஆரம்பக் காலம் தொட்டே காணப்படுகின்றது. உதாரணமாக கன்னங்கர வீதி, டி.பி. ஜயா வீதி, மஹிந்த தேரர் வீதி என்று பலரினதும் பெயர்களை வைத்து வீதிகள் காணப்படுகின்றன. இவை எதுவும் பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல.

அப்போதைய அரசாங்கங்கள் அவர்களை கௌரவிக்கும் முகமாக வீதிகளுக்கு அவர்களின் பெயர்களை வைத்தன. ஆனந்த குமாரசுவாமி வீதியை நெலும்பொக்குன என்று மாற்றியமை அநாகரிகமான செயலாகவே கருதப்பட வேண்டும். கலைக்காகத் தொண்டு செய்து நாட்டிற்கு நற்பெயரைப் பெற்றுக் கொடுத்த ஆனந்த குமாரசுவாமிக்கு அரசு துரோகம் இழைத்து விட்டது என்றார். __
READ MORE - வீதியின் பெயர் மாற்றம் தமிழருக்கு செய்த துரோகம்

யாழ் போதனா வைத்திய சாலையில் தடை செய்யத மருந்து பாவனையாம்.!


இருதய நோய்க்கு உட்கொள்ளப்படும் ஐசோபேட் மொனட்ரேட் (Isosorbide Mononitrate) 20 மில்லிகிராம் என்ற மருந்தை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும் யாழ். போதனா வைத்தியசாலையில் பாவனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இம்மருந்தை உட்கொண்ட அந்நாட்டவர்கள் 70 பேர் பலியாகியிருந்ததோடு, 100 ற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே பாகிஸ்தானிலுள்ள நிறுவனம் ஒன்றினுடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுவருகின்ற ஐசோபேட் மொனட்ரேட் 20 மில்லிகிராம் என்கின்ற மருந்துப் பாவனையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

அதற்கமைய, அரச மருத்துவனைகள், அரச மருந்தக கூட்டுதாபனம், தனியார் வைத்தியசாலைகள் ஆகியவற்றில் மீள் அறிவித்தல் வரை இந்த மருந்தை உபயோகிக்க வேண்டாம் எனவும் அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.

இருந்தபோதிலும், குறித்த மருந்துப்பாவனை தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மருந்தை இறக்குமதி செய்கின்ற பாகிஸ்தானிலுள்ள நிறுவனத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறியக்கிடைத்த போதிலும் ஐசோபேட் மொனட்ரேட் 20 மில்லிகிராம் மருந்தை வைத்தியசாலையில் பாவிக்க வேண்டாம் என உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
READ MORE - யாழ் போதனா வைத்திய சாலையில் தடை செய்யத மருந்து பாவனையாம்.!

பேஸ்புக்கில் கடற்படை ரகசியங்களை வெளியிட்ட அதிகாரிகள்

உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய கடற்படை ரகசியங்களை வெளியிட்டதற்காக 4 அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படை ரகசியங்களை உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் மற்ற இணையதளங்களில் பகிர்ந்து கொண்டதாக கடற்படை அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணைக்குழு, கடற்படை தலைமையகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. இவர்களில் 2 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ராணுவத்தில்(தரைப்படை) லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு நிகரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE - பேஸ்புக்கில் கடற்படை ரகசியங்களை வெளியிட்ட அதிகாரிகள்

உலகிலேயே மிகப்பெரிய மரகத கல் ஏலத்தில்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கெலோவ்னா எனும் இடத்திலுள்ள வெஸ்டர்ன் ஸ்டார் ஏல விற்பனை நிலையத்தில் 11.5 கிலோகிராம் நிறையுடைய உலகின் மிகப் பெரிய மரகதக் கல் வியாழக்கிழமை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். பிரேஸிசிலில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்த மரகதக் கல் இந்தியாவில் வெட்டப்பட்டது. இது சுமார் 1.15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை விலை போகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
READ MORE - உலகிலேயே மிகப்பெரிய மரகத கல் ஏலத்தில்