நாதியற்ற தமிழ் இனமாய் இன்று நிற்கின்றோம்: காணொளி

18.5.13



அரக்க குணம் கொண்ட அசுரர்களினால் அழிக்கப்படுகிறோம்
 
விதைகுளியில் வீணா க புதைக்கப்படுகிறோம்
 
விடுதலையின் தாகத்தை அழித்து வீ ணார்கள் எம்மை
 
அழித்து விதை குளியில் எம்மைப் புதைத்து தன் நாடு என்று
 
உரைக்க முற்படும் அரக்கர்களால் வி‌டிவை அது தரும்
 
ஒளியைக்கூட வெளியில் நின்று அனுபவிக்கமுடியாத
 
நாதியற்ற தமிழ் இனமாய் இன்று நிற்கின்றோம் .
 
கூடி நின்று காக்கை போல் குரவளை கடிக்கும்
 
கொடிய கழுகுகளை விரட்டவேண்டும் .
 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலையாது
 
அணி திரன்டு எமது இனம் விடுதலைகான ஒற்றுமைதானே
 
எமக்கு கரம் கொடுக்கும் என்பதை நினைத்து
 
அதன் வழிசெல்வோம்.
 

READ MORE - நாதியற்ற தமிழ் இனமாய் இன்று நிற்கின்றோம்: காணொளி

ஓட்டுக் கேட்டபோது பிரபாகரன் படம் பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது? என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.
READ MORE - ஓட்டுக் கேட்டபோது பிரபாகரன் படம் பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!

லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை!


இன்று லண்டனில் நடைபெறும் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை மதியம் 1 மணியில் இருந்து 6 மணி வரைக்கும வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் வசதி கருதி நேரலையாக வெளியிடப்படுகின்றது.இன்று
Live stream by Ustream
READ MORE - லண்டனில் முள்ளிவாய்க்கால் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை!

அஞ்சலி செலுத்தக் கூடும்; யாழ். பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்பு தீவிரம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தக் கூடும் என்ற சந்தேகத்தில் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரே இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களினால் நேற்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்று இரவு முதல் யாழ். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியும் வளாகத்திற்கு உள்ளும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ'டிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வவுனியா நகர சபைத் தலைவர் ரதன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகள் வவுனியா நகர சபை மண்டபத்தில் காலை 10 மணிக்கும் கிளிநொச்சி அறிவகத்தில் இன்று காலையும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று 5 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE - அஞ்சலி செலுத்தக் கூடும்; யாழ். பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்பு தீவிரம்

தமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்சி காட்சிகள்

இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலாமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனப் அழிப்பு திகழ்கிறது. உலகம் தனது கண்களை மூடியிருக்க, சிங்களப் பேரினவாதம் தன் நரபலி வேட்டையை மேற்கொண்டது. எமது தேசம் கண்ணீரில் மூழ்கி, குருதியில் குளித்தது. இது தொடர்பாக பல்வேறு காணொளிகளும், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வெளிவந்திருந்தது. இத்தருணத்தில், இதுவரை வெளிவராத புகைப்படங்களை தந்துதவியவர்கட்கு நன்றி தெரிவிப்பதோடு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டை நினைவுகூருமுகமாக பரிஸ்தமிழ்.கொம்மின் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறோம்(http://www.jvpnews.com/srilanka/27777.html)








READ MORE - தமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்சி காட்சிகள்

முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்

சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.


ஆனால் காலம் அந்த சாவு இருளின் பள்ளத்தாக்கிற்கு அவர்களை கொண்டு சென்றதுடன் கொன்றும் சென்றது. கடல், தரை, வான் என முப்படைகளையும் சட்டநிர்வாக, நீதி நிதி பரிபாலனம் என்ற கட்டமைப்புக்களையும் கொண்டு முடிசூடா அரசாக விளங்கிய தமிழரின் அரசை, உரிமைப்போராட்டத்தை உலக வல்லாதிக்கங்களான அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் துணை கொண்டு அரச பயங்கரவாதத்தின் மூலம் தமிழ் மக்களை வெற்றி கொண்டது வெறிகொண்ட இலங்கை அரசு. இது நான்கு வருடங்களுக்கு முன்பு இதே காலத்தில் நடந்தேறியது.

அப்பாவித் தமிழ் மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி சிறிது இளைப்பாறக்கூட முடியாமல் துரத்தி துரத்திக் கொல்லப்பட்டனர். விமானக் குண்டுவீச்சு, பல்குழல் பீரங்கிகள், கொத்தணிக் குண்டுகள், இரசாயனக் குண்டுகளால் மக்களின் உடலங்கங்கள் சிதறிப் போயின.
பலர் பிணத்தோடு தூங்கி, பிணத்தோடு பிணமாக வீழ்ந்தனர். மேலும் பலர் நடை பிணங்களாகினர். நிலமெல்லாம் இரத்தமாக இருந்தது. ஐ.நா. நாற்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கைவிட்டது.
ஆனால் இறுதிப் போருக்கு முன்பிருந்த சனத்தொகையோடு அளவிடும் போது மாண்டு போனவர்களின் தொகை இதுவரை கணக்கிடப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
 
 உடலுறுப்புக்களை இழந்துள்ளோர் பல்லாயிரக்கணக்கிலிருக்க காணமல் போனோர் பட்டியல் மற்றொருபுறம் நீள்கிறது. இரசாயனக் குண்டுகளின் தாக்கத்தால் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு எமது சமூகம் உள்ளாகி இருக்கிறது.

மே 18 2009 நண்பகல் நேரம் வடக்கு வானம் இருண்டது. சூரியன் சில நிமிடங்கள் தன்னை மறைத்துக் கொண்டான். கருமேகங்கள் ஒன்றாகக் கூடின. கண்கொண்டு பார்க்க முடியாத மின்னல் வெட்டுக்கள்.
காது கொண்டு கேட்கமுடியாத தொடர் இடி. ஆனால் ஒரு துளி மழை கூட இல்லை. ஒரு தேசத்தின் முடிவை, அறத்துக்கு புறம்பான போரை அந்த அசரீரி காட்டி நின்றது. தமிழினத்தின் ஆயுதப் போராட்டம் முடிந்துவிட்டது என்பதை இதைக் கொண்டே அநேக மக்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். இது கதையோ அல்லது கற்பனையோ அல்ல எம் இன அழிப்பின் உண்மை.

இந்த நூற்றாண்டின் மனித இனப்படு கொலையின் சின்னம், அடையாளம். அதுவே முள்ளி வாய்க்கால். எமக்கும், போராடும் மனித குலத்திற்கும் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது.
அந்தப் பாடங்கள் ஈழத் தமிழர்களால் முழுமையாகக் கற்கப்பட்டு விட்டதா?, உணரப்பட்டு விட்டதா?, விளங்கிக் கொள்ளப்பட்டு விட்டதா? எம்முள் இருக்கும் ஒற்றுமையின்மையே எமது முதல் எதிரியும், துரோகியும் ஆகும்.
வேறு எந்த இன விடுதலைப் போராட்டத்திலாவது இந்த அளவுக்கு காட்டிக் கொடுப்புகளும், துரோகத்தனங்களும் இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இவ்வளவு இழப்புக்களுக்கு பின்னும் அதன் தாற்பரியத்தை உணராதவர்களாகவே எமது சமூகம் இன்றும் இருக்கின்றது.
சுயாட்சிக்காக, உரிமைக்காக, அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு சமூகம் சாதாரணமாக அரசியல்வாதிகள் செய்யும் அரசியலை செய்ய முடியாது. அப்படிச் செய்யின் அது விடுதலைக்கு உலைவைப்பதாய் அமையும். இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை ஒற்றுமைப்பட்டு ஒரு திசையில் செல்ல முடியாதவர்களாய் இருக்கின்றார்கள்.
பொது மேடையில் மண்ணுக்காக மாண்டவர்களுக்கும், மக்களுக்கும் அக வணக்கம் செலுத்தும் இவர்கள் எதற்காக அவர்கள் இறந்தார்கள் என்பதை இன்னமும் சரிவரப் புரிந்தவர்களைப் போல் நடந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். எப்போது ஒற்றுமைப்படுகிறோமோ அப்போதுதான் எமக்கு விடுதலை. அது எப்போது நடக்கும்?

அரசியல் இராஜதந்திரங்களைப் பொறுத்தவரையில் நிரந்தரப் பகைவனும் இல்லை. நண்பனும் இல்லை. ஆனால் நிலைத்திருப்புக்கு தங்கி வாழுதல் அவசியம் என்னும் நடைமுறைக் கோட்பாட்டுக்கமைய நிரந்தர நண்பர்களை கட்டாயம் உருவாக்க வேண்டியுள்ளது.
ஓர் அரசாக காட்சியளித்த நாம் எமக்கு ஒரு இக்கட்டான சுழல் வரும்போது எமக்காக உண்மையாக இருக்கக் கூடிய ஒரு நட்பு நாட்டை நாம் உருவாக்கி கொள்ளத் தவறிவிட்டோம். தமிழர் முள்ளிவாய்க்காலுக்காக இட்ட தவறுகளில் இதுவும் ஒன்று.
தேசிய இனமாக இருக்கும் எமக்கு இன்று சர்வதேச அரசியல் களம் திறக்கப்பட்டுள்ளது. எம்மை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. இராஜதந்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாணக்கிய அடிப்படையில் தமக்கான சிறந்த நண்பர்களை தமிழர் தரப்பு உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
கருணாவினுடைய பிளவு தொடங்கி ஆயுதக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், சர்வதேச ஆயுதக் கொள்வனவு, வலைப்பின்னல் முடக்கம், இலங்கைக்கான ஆயுத தளபாட வசதியளித்தல், செய்மதி ரீதியான உதவிகள், பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்தல் என பலவற்றை தமிழருக்கெதிராக செய்த அமெரிக்கா இன்று தமிழர் நலன் பேசுகிறது.
 
 அமெரிக்காவுக்கு தமிழர் மீது அன்போ, பாசமோ, அக்கறையோ கிடையாது. மாறிவரும் பூகோளப் புவிசார் அரசியல் அமெரிக்காவுக்கு அந்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் அமெரிக்க சார்பு அரசு அமையும் போது இந்த நிர்ப்பந்த அரசியல் தேவையற்றதாகப் போய்விடும் என்பது நிதர்சனம். ஆக இவற்றுள் எமது அரசியல் அடிபட்டுப் போகாத படி எமக்கானதை நாம் பெறுவதே முதிர்ச்சி அடைந்த அரசியல் ஞானத்தினுடைய பிரயோகமாக இருக்கும்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் நாம், அதற்கேற்றபடி அரசியலை நகர்த்தக்கூடியவர்களாக இருக்கவேண்டும். எமக்குள் ஒற்றுமைப்பட்டு முள்ளிவாய்க்கால் சொல்லித்தந்தவற்றை சரிவர உணர்ந்து செயற்படாது போகுமிடத்து அதாவது பலவீனங்களை பலப்படுத்துவதோடு கட்டமைக்கப்பட்ட செயற்றிட்டத்தின் ஊடாகப் பயணிக்காவிடின் எமக்கான இலக்கு நீண்டதூரத்திலேயே இருக்கும்.
அதைவிடுத்து எந்த ஏக்கத்துடன் தமிழர்கள் மாண்டார்களோ அதை நிறைவேற்றுவதே தமிழ் மக்கள் அவர்களுக்குச் செய்யும் ஆத்மார்த்த அஞ்சலியாக அமையும். இவ்வளவு இழப்புக்களுக்கு பின்னும் அதன் தாற்பரியத்தை உணராதவர்களாகவே எமது சமூகம் இன்றும் இருக்கின்றது.
சுயாட்சிக்காக, உரிமைக்காக, அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு சமூகம் சாதாரணமாக அரசியல்வாதிகள் செய்யும் அரசியலை செய்ய முடியாது. இந்த நூற்றாண்டின் மனித இனப் படுகொலையின் சின்னம், அடையாளம். அதுவே முள்ளிவாய்க்கால்.
எமக்கும், போராடும் மனித குலத்திற்கும் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது அது. அந்தப் பாடங்கள் ஈழத் தமிழர்களால் முழுமையாகக் கற்கப்பட்டு விட்டதா?, உணரப்பட்டு விட்டதா?, விளங்கிக் கொள்ளப்பட்டு விட்டதா? பிரதி :உதயன்
READ MORE - முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு:போலீசார் தடை கூட்டம் நடத்திய சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடலூரில் இன்று மே 17 முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். 

இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கடலூர் போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்தது.  இதனால் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால்  பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் தடை விதித்து, நாம் தமிழர் மாவட்டச் செயலர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.

இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர். இதில் சீமான் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
READ MORE - முள்ளிவாய்க்கால் நினைவு:போலீசார் தடை கூட்டம் நடத்திய சீமான்

மே18- தமிழர் இனவழிப்பு நினைவு நாள்.2013 - தமிழீழ விடுதலைப் புலிகள்



இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.
 ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது. தலைமைச் செயலகம்,
 த/செ/ஊ/அ/01/13
 தமிழீழ விடுதலைப் புலிகள்,
 தமிழீழம். 18/05/ 2013.
 மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013
அன்பான தமிழ்பேசும் மக்களே, இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.
எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளே தமிழர் இனவழிப்பைச் சுட்டும் பொதுநாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த கொடூரமான இனவழிப்பை நினைவு கொள்வதென்பது அவ்வடுக்களையும் கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுவதில் முடிந்து விடுதல் கூடாது. மாறாக இவற்றின் வலிகளை உணர்ந்து, எமது இனம் தொடர்ந்தும் இவ்வலிகளைச் சுமக்கவிடாமல் எமக்கான விடுதலையை விரைந்துபெற முனைப்புடன் செயற்பட ஊக்கப்படுத்தும் ஒருநாளாக அமைய வேண்டும். இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான நான்காம் ஆண்டை நினைவுகொள்கின்றோம். இக்காலப்பகுதியில் எண்ணற்ற துயரங்களை எமது இனம் கடந்துவந்துள்ளது. போர் முடிந்ததாக அறிவித்து நான்காண்டுகளாகியும் எமது மக்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தும் அவர்கள் படையினரின் கெடுபிடிகளுக்குள்ளேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர். எங்கு பார்த்தாலும் படையினரின் இருப்பே எமது தாயகத்தில் நிரம்பியுள்ளது. தமிழ்மக்களின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் படைத்தரப்பினரின் தலையீடு இருந்தவண்ணமேயுள்ளது. படையினருக்காக எமது மக்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்படுகின்றன. படையினரின் துணையோடு எமது நிலங்கள் கொள்ளையிடப்படுகின்றன. ஒரு படையாட்சியே அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எமது மண்ணினதும் மக்களினதும் வளங்கள் அன்னியரால் சூறையாடப்படுகின்றன. எமது மக்களைத் தொடர்ந்தும் அச்சநிலைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வைத்திருக்கும் நோக்கோடு சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போதும் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடு, போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பன தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எமது மக்களின் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்தைச் சொல்ல முடியாத அடக்குமுறைக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றார்கள். ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அரச பயங்கரவாதத்தின் வன்மத்தைத் துல்லியமாகக் காட்டுகின்றது. தனியே ஊடகங்கள் மீது மட்டுமன்றி அரசியல்வாதிகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள் என்று அரசாங்கத்தை விமர்சிக்கும், நபர்கள் மீது அரசவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதுகூட வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன. இந்நிலையில் சாதாரண மக்களுக்குரிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது? போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டபின் இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களுக்கான நியாயத்தை வழங்குவதற்குப் பதிலாக மென்மேலும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஒட்டுமொத்தமாகவே தமிழினத்தைக் கருவறுப்பதையே சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துகொண்டுள்ளது. உலகத்துக்கு தன்னை நல்லபிள்ளையாகக் காட்ட சில திருகுதாளங்களை சிங்களப் பேரினவாத அரசு செய்துகொண்டுள்ளது. தமிழர்களைத் தமது படைகளில் சேர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தாம் தமிழர்களைச் சரிசமமாக நடாத்துவதாக உலகை ஏமாற்ற முனைகிறது. தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதே இனச்சிக்கலுக்கான தீர்வாக அமையுமேயன்றி படையில் தமிழர்களைச் சேர்ப்பது போன்ற நாடகங்கள் தீர்வாகா. ஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நாட்களின் ஆண்டு நினைவில் எமது இனம் துக்கித்திருக்கையில் மிகப்பெரும் போர் வெற்றிவிழாவை சிங்கள தேசம் கொண்டாடுவது என்பது உண்மையில் சிங்கள இனமானது நல்லிணக்கத்துக்குத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இந்த வெற்றி மமதைக் களியாட்டமானது இலங்கைத்தீவு இணைய முடியா இரு தேசங்களைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டுகின்றது. சிங்கள அரசின் இந்தக் கொடூரமான முகத்தை சில பன்னாட்டு ஊடகங்கள் ஓரளவாவது வெளிக்கொண்டு வருகின்றன. சில மனிதவுரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைகளைப் பதிவு செய்து வருகின்றன. தன்னலமற்றுப் பணியாற்றும் இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கின்றன. அதேவேளை, பன்னாட்டு அரசுகள் சில தமது சொந்த நலன்களுக்காகவே சிறிலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்தாலும்கூட, பேரினவாத அரசின் தமிழர் மீதான விரோதப்போக்கை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன. ஆனால் இந்த மாற்றத்துக்காக எமது இனம் கொடுத்த விலை மிகப்பெரியது. கடந்த காலத்தில் எமது குரல்களைச் செவிமடுக்காது பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது மெல்ல மெல்ல, அதுவும் அரைகுறையாகக் குரல்கொடுப்பது என்பது தமிழ்மக்கள் தொடர்பில் உலகம் இன்னமும் முழுமையாக நியாயத்தின்பால் செயற்படத் தொடங்கவில்லையென்பதையே உணர்த்தி நிற்கின்றது. தமிழ்மக்கள் குறித்த கரிசனை மேலெழும்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது? நியாயமற்ற முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு எமது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதில் குறியாக இருந்த உலகநாடுகளே எமது மக்களின் பாதுகாப்பற்ற தன்மைக்கும், இன்று அவர்கள் எதிர்கொள்கின்ற இனவழிப்புக்கும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளவர்கள். உருப்படியான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையைக்கூட எமது மக்கள்சார்ந்து ஏற்படுத்தாமல் வெறும் காகித அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது விளலுக்கு இறைத்த நீரே என்பதை உலகநாடுகள் உணரவேண்டும். சிங்களப் பேரினவாதத்தின் கோரக்கரங்களில் எமது மக்களைச் சரணாகதியாக்கி, மக்களை அழிப்பவர்களிடமே அவர்களின் பாதுகாப்பையும், குற்றச்செயல்களை விசாரிக்கும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு வாளாவிருக்கும் பன்னாட்டுச்சமூகம் மிகவிரைவில் விழித்துக்கொள்ள வேண்டும். படிப்படியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்பை நிறுத்தி உரிய தீர்வைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருந்த எமது மக்கள் படிப்படியாகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். மண் அபகரிப்புக்கு எதிராக தாயகத்தில் அறவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தவண்ணமுள்ளன. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் புத்துணர்வோடு புதிய தடம் பதித்துள்ளன. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எம்மினம் இன்றில்லை. இனியும் காலந்தாழ்த்தாது பன்னாட்டுச் சமூகம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயல வேண்டும். உரிய தீர்வை உரிய நேரத்தில் பெற்றுத்தர வகைசெய்யாவிடத்து நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு தெரிவில்லை. அன்பான தமிழ்பேசும் மக்களே, விடுதலைக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் துணிந்த மக்கள் கூட்டத்தை எந்த அடக்குமுறைச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களைப் புரிந்து போராடிய நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை ஓய்ந்துவிட முடியாது. உலக அரங்கில் எமது நியாயமான போராட்டம் ஒருநாள் அங்கீகரிக்கப்படும். எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம் என இந்நாளில் நாம் உறுதிபூணுவோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம். இராமு.சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.
READ MORE - மே18- தமிழர் இனவழிப்பு நினைவு நாள்.2013 - தமிழீழ விடுதலைப் புலிகள்

யாழ்.பல்கலையிலிருந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் வெளியேற்றம்


தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அச்சத்தின் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கமும் சிங்களப் படைகளும் வன்னியில் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தின் போது உயிரிழந்த ஒரு லட்சம் வரையான பொதுமக்களுக்கு வன்னிப் பகுதி உட்பட தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இன்றைய தினமும் பல்கலைக்கத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழகத்தை ஒரு வார காலம் மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் கல்வியதிகாரிகள் ஆலோசித்திருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், பல்கலைக்கழகம் மூடப்படுவதற்கு முன்பாகவே யாழ்.பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்ற தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அச்சத்தின் காரணமாக வெளியேறி தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகச் சுற்றாடலில் கடந்த சில தினங்களாக படையினரும் படைப் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்ற கண்காணிப்பு நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்தில் நிலவிய அச்சமான சூழ்நிலையைத் தொடர்ந்தே மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
கடந்த மாவீரர் தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நின்ற மாணவியொருவர் அச்சத்தின் காரணமாக கொழும்புக்குச் சென்று அங்கிருந்தவாறு தனது முகப்பதிப்பில் (பேஸ்புக்) வெளியிட்ட கருத்தானது அதே விடுதியில் நின்ற தமிழ் மாணவிகளை பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் விசாரணைக்கு அழைக்கக் காரணமாக இருந்தது.
அதாவது, மாவீரர் தினத்தன்று மாணவிகள் மாவீரர்களுக்கு தீபமேற்றினர் என்றும் அவர்கள் அன்றைய தினம் ஒருவகையான வெறித்தனத்துடன் நின்றனர் என்றும் குறிப்பாகச் சொல்லப்போனால் அவர்கள் புலிகள் போலவே நின்றனர் என்றும் குறித்த மாணவி தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தானது தமிழ் மாணவிகளைப் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரிடம் மாட்டிவிடுகின்ற செயற்பாடாக அமைந்தது.
இந்த நிலையிலேயே வன்னியில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அச்சத்தின் காரணமாக வெளியேறியுள்ளனர்.
ஈழப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த தொடர்புகளைக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழகம் போராட்டத்தின் நியாயப்பாடுகளைத் தமிழ் மக்களுக்கும் சர்வதேச அரசாங்கங்களுக்கும் எடுத்தியம்பும் களமாகவும் விளங்கியது. இந்த நிலைப்பாட்டிலிருந்து யாழ்.பல்கலைக்கழகம் தற்போதும் மாறாமல் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
READ MORE - யாழ்.பல்கலையிலிருந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் வெளியேற்றம்

புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைத்தாலே? தண்டனைக்குறிய குற்றமாகும்: இராணுவப் பேச்சாளர்

17.5.13

இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும். ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையில் மூன்று தசாப்தகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நான்காண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந் நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவம் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடும் முகமாக தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விசேட இராணுவ வெற்றி விழாக்கள் நடைபெற உள்ளது.

இதற்கு ஈடு செய்யும் வகையில் வடக்கில் சில பகுதிகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களை அனுஷ்டிக்கும் நிழ்வுகள் நடத்தப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குற்றச் செயலாகும். இலங்கை உட்பட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைச் செய்துள்ளனர்.

ஏனெனில், இவ் இயக்க பயங்கரவாத அமைப்பு என்றப்படியால். ஆகவே இவ்வாறானதொரு தடைச் செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்களை நினைவுக்கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான விஷம முயற்சிகளுக்கு பொது மக்களை குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் ஊக்குவித்து வருகின்றது எனக் கூறினார்.
READ MORE - புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைத்தாலே? தண்டனைக்குறிய குற்றமாகும்: இராணுவப் பேச்சாளர்